படியளக்கும் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படியளக்கும் விழா மதுரை நகர வீதிகளில் நடைபெறுகின்ற விழாவாகும்.

சோதனை[தொகு]

உலகின் அனைத்து உயிர்களுக்கும் படி அளப்பதற்காக சிவபெருமான் புறப்பட்ட போது பார்வதி செய்த சோதனையே இந்த விழாவிற்குக் காரணமாக அமைந்தது. அவர் பாத்திரத்தில் ஒரு எறும்பினை அடைத்தார். அனைத்து உயிர்களுக்கும் படியளந்துவிட்டு வந்த சிவபெருமானிடம் ஒரு உயிருக்கு அவர் படியளக்கவில்லை என்று கூறினார். ஆனால் பாத்திரத்தைத் திறந்தபோது அதில் அந்த எறும்புக்கு அருகில் அரிசி இருந்தது. [1]

விழா[தொகு]

இந்நிகழ்வினை நினைவுகூரும் வகையில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியில் இறைவனும், இறைவியும் மதுரை நகரின் வீதிகளில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் வகையில் சப்பரததில் உலா வருவர். இவ்விழா தொடர்ந்து நடைபெறுகிறது. [1] இவ்விழாவினை படியரிசி விழா என்றும் அழைக்கின்றனர். [2]

பிற கோயில்கள்[தொகு]

தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட கோயில்களிலும் இவ்விழா நடைபெறுகிறது.

  • மானாமதுரை சோமநாதர் கோயில் [3]
  • திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர் கோயில் [4] [5] [கு 1]

குறிப்புகள்[தொகு]

  1. சிவன் கோயில் என்றாலும் இங்கு அம்பிகை முக்கிய இடம் பெற்றுள்ளார். இப்பகுதியில் அபிராமி கோயில் என்றுதான் இக்கோயிலை அழைக்கின்றனர்.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படியளக்கும்_விழா&oldid=3713847" இலிருந்து மீள்விக்கப்பட்டது