மூவேந்தர்களின் தனியுடைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்று வேந்தர்களும் தமக்கே உரியனவாகச் சில அடையாளப் பொருள்களைக் கொண்டிருந்தனர். தொல்காப்பியமும் வேறு சில பாடல்களும் அவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன. திருவள்ளுவ மாலை தொகுப்பில் உள்ள சீத்தலைச் சாத்தனார் பாடல் இவற்றைத் தொகைச்சொல்லால் சுட்டுகிறது.

மேலும் காண்க[தொகு]

உடைமை ! சேரர் சோழர் பாண்டியர்
நாடு குடநாடு புனல்நாடு தென்னாடு
ஆறு பொருநை காவிரி வைகை
தலைநகர் கருவூர் உறையூர் மதுரை
துறைமுகம் தொண்டி புகார் கொற்கை
கொடி வில் புலி கயல்
பூ பனை ஆத்தி வேம்பு
மலை நேரிமலை கொல்லிமலை பொதியமலை
சுடர் தீ ஞாயிறு திங்கள்
மா பாடலம் கோரம் கனவட்டம்