முட்டல் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முட்டல் ஏரி
அமைவிடம்ஆத்தூர் சேலம், சேலம் மாவட்டம், தமிழ்நாடு
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு70 ஏக்கர்கள் (0.28 km2)

முட்டல் ஏரி, தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும்.

அமைவிடம்[தொகு]

ஆத்தூரில் இருந்து, 5 கி.மீ., தொலைவில், கல்லாநத்தம் ஊராட்சி, கல்வராயன்மலை அடிவாரத்தில் முட்டல் கிராமம் உள்ளது. இது முட்டல் மலையிலிருந்து அருவியாக ஒடி பின் ஏரியில் சென்றடைகிறது. இந்நீரின் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெற்கிறது.அங்கு செல்ல, டவுன் பஸ் வசதி உள்ளது. அங்குள்ள முட்டல் ஏரி மற்றும் வனப்பகுதிகளில், புள்ளிமான், காட்டெருமை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வனவிலங்கு, பறவைகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

சுற்றுலாத்தலம்[தொகு]

2016ல், சுற்றுலா பயணிகள் தங்க, மூங்கில் குடில்கள் கொண்ட தங்கும் விடுதிகள், படகு சவாரி அமைக்கப்பட்டன. முட்டல் ஏரி ஆழப்படுத்தாததால், தற்போது சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால், மூங்கில் உள்ளிட்ட குடில்கள், படகுகள் பயனற்ற நிலையில் உள்ளது.

வலைத்தளம்[தொகு]

அமைவிடம் முட்டல் ஏரி அமைவிடம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டல்_ஏரி&oldid=3613104" இலிருந்து மீள்விக்கப்பட்டது