பீலி சிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீலி சிவம் (5 சூலை 1938 - 25 செப்டம்பர் 2017) தமிழ்த் திரைப்பட நடிகராவார்.[1] திரைத்துறையிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் சுமார் 60 ஆண்டுகள் நடித்தவர். நாடகத்துறையின் சிறந்த நடிகராக தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1995 ஆம் ஆண்டு பெற்றார்.

திரைப்படத்துறைப் பங்களிப்புகள்[தொகு]

இமைகள், தூரத்து இடிமுழக்கம், அபிமன்யு, தங்க பாப்பா, முகமது பின் துக்ளக், விருதகிரி, அழகன், முதல் வசந்தம், மனசுக்கேத்த மகராசா, ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.[2]

மறைவு[தொகு]

25 செப்டம்பர் 2017 அன்று உடல்நலக் குறைவு காரணமாக தனது 79 ஆவது அகவையில் மதுரையில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார்". தினமணி. 25 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "தமிழ் சினிமா மூத்த நடிகர் பீலி சிவம் காலமானார்..!". விகடன். 25 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீலி_சிவம்&oldid=2681589" இலிருந்து மீள்விக்கப்பட்டது