திருச்சந்த விருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சந்த விருத்தம்
கிருஷ்ணர் கம்சானை கொன்ற ஓவியம், லாசு ஏஞ்சல்சு கவுண்டி மியூசியம் ஆப் ஆர்ட்.
தகவல்கள்
சமயம்வைணவம்
நூலாசிரியர்திருமழிசையாழ்வார்
மொழிதமிழ்
காலம்பொ. ஊ 9-10 ஆம் நூற்றாண்டு
வரிகள்120 பாடல்கள்

திருச்சந்த விருத்தம் திருமழிசையாழ்வாரால் திருமாலைப் போற்றி 120 விருத்தப்பாக்களைக் கொண்டு இயற்றப்பட்டது.[1] சந்தங்கள் என்பது இனிய இசையை (ஒலியை) எழுப்புவது என்று பொருள்[2], இனிய ஒலிகளால் திருமாலை வணங்கி போற்றியதால் திரு என்னும் அடைமொழியைத் தாங்கி விருத்தம் என்னும் பாக்களால் பாடப்பட்டதால் இந்நூல் திருசந்த விருத்தம் எனப்பெயர் பெற்றது. இது 120 பாசுரங்களை கொண்டது, இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாயிரத்தில் இடம் பெற்றுள்ளது.[3] இது திருமாலை வணக்கத்திற்காகவும், கிருஷ்ணர் மற்றும் வெங்கடாசலபதி போன்ற திருமாலின் அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [4]

பாடல்கள்[தொகு]

இந்த இலக்கியம் கிருஷ்ணரின் வாழ்க்கை, அசுரர்களை வதம் செய்தமை, நப்பின்னையை மணக்க காளைகளை அடக்கியமை, குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணரின் பங்கு ஆகியவற்றைப் பற்றிய உள்ளடக்கங்கள் இதில் உள்ளது[5]

கம்சன் மீதான கிருஷ்ணரின் வெற்றியும், பூதனையின் நஞ்சு நிறைந்த பாலை உறிஞ்சிய தெய்வ செயல்களையும், வாமனனின் மூன்றடி மண் செயல்களையும் கீழ்கண்ட பாடல் குறிக்கிறது:[6]

வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா

கஞ்சனைக் கடிந்து மண் அளந்துகொண்ட காலனே

வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்

அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதிதேவன் அல்லையே?

திருச்சந்த விருத்தம், 43-ம் பாசுரம்[7]

கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பர், இந்தப் படைப்பின் சில பாடல்களிலிருந்து உள்ளூக்கம் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது:[8]

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்

போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே

தேன் அகஞ்செய் தண் நறும் மலர்த் துழாய் நன் மாலையாய்

கூன் அகம் புகத் தெறித்த கொற்ற வில்லி அல்லையே?

திருச்சந்த விருத்தம், 30-ம் பாசுரம்[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "P202235.htm-திருமழிசை ஆழ்வார் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.
  2. "5.1 சந்தம் - சொல்பொருள் விளக்கம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-02-29.
  3. "வைணவ இலக்கியங்கள் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-12.
  4. Ramesan, N. (1981) (in en). The Tirumala Temple. Tirumala Tirupati Davasthanams. பக். 204. https://books.google.com/books?id=aKEcAAAAMAAJ&q=tiruchanda+viruttam. 
  5. Temples of Kr̥ṣṇa in South India: History, Art, and Traditions in Tamilnāḍu. 2002. https://books.google.com/books?id=pzgaS1wRnl8C&dq=tiruchanda+viruttam&pg=PA48. 
  6. Makarand Joshi. Tiruccanda Viruttam Of Tirumalisai Alvar English Translation And Notes By BSS Iyengar. பக். 38. http://archive.org/details/tiruccandaviruttamoftirumalisaialvarenglishtranslationandnotesbybssiyengar. 
  7. "முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-02-29.
  8. Manavalan, A. A. (2022-03-28) (in en). Ramayana: A Comparative Study of Ramakathas. Global Collective Publishers. பக். 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-954021-78-5. https://books.google.com/books?id=dsZuEAAAQBAJ&dq=thiruchanda+virutham&pg=PT97. 
  9. "முதல் ஆயிரம் திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-02-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சந்த_விருத்தம்&oldid=3899403" இலிருந்து மீள்விக்கப்பட்டது