தேசிய நீர்வழி 6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய நீர்வழி 6 (National Waterway 6) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் இருக்கும் கசார் மாவட்டம் லக்கிபூருக்கும் பராக் நதியின் பங்கா நகருக்கும் இடையில் அமைந்துள்ள நீர்வழியாகும் [1]. இத்திட்டம் 2013-14 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம் இரண்டு கட்டங்களில் இத்திட்டத்தை நிறைவேற்றும். 2016-17 ஆம் ஆண்டு காலத்தில் இத்திட்டத்தின் முதலாவது கட்டமும், 2018-2019 இல் இத்திட்டத்தின் இரண்டாவது கட்டமும் நிறைவேற்றப்படும். வடகிழக்கில் உள்ள நீர்வழிகளை ஒருங்கிணைத்து அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக சரக்கு போக்குவரத்துக்கு உதவுவது இத்திட்டத்தின் முக்கிய இலக்கு ஆகும்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Waterway - 6". www.india-wris.nrsc.gov.in/. India-WRIS. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.

புற இனைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நீர்வழி_6&oldid=3480009" இலிருந்து மீள்விக்கப்பட்டது