நாடாய்வாளர்
நாடாய்வாளர்[தொகு]
அமெரிக்காக் கண்டத்தைக் கண்டுபிடித்த கொலம்பஸ் ஒரு நாடாய்வாளர்(Explorer) ஆவார்.
பயணத்திற்கான காரணம்[தொகு]
நாடாய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பயணங்களை மேற்கொண்டனர்.
- சிலர் கடல் கடந்து வாணிகத்தின் மூலம் பெரும் பொருள் பெற்றுச் செல்வர்களாகிவிடலாம் என்று கருதினார்கள்.
- தங்கள் அரசுக்குப் புதுப்புது நாடுகளைக் கண்டுபிடித்துச் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் புறப்பட்டுச் சென்றவர்களும் உண்டு.
- பிறநாட்டு மக்களைத் தங்கள் சமயத்திற்கு மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் பயணம் செய்தனர்.
- ஆறுகள் உற்பத்தியாகும் இடம், துருவங்களிலுள்ள பனிக்கண்டங்கள் முதலியவற்றைக் கண்டறியவேண்டும் என்றும் பலர் பயணம் செய்தனர்.
சவால்கள்[தொகு]
பண்டைய நாடாய்வாளர்களுக்குப் பல இன்னல்களும் இடையூறுகளும் நேர்ந்தன. உணவு இல்லாமலும், புயல், வெள்ளம் போன்றவற்றில் சிக்கியும், காடுகளில் வசித்த நாகரிகமற்ற மக்களாலும், கொடிய விலங்குகளாலும், பலர் துன்பப்பட்டனர். சிலர் இறந்துபோனதுண்டு.
புகழ்பெற்ற நாடாய்வாளர்கள்[தொகு]
கொலம்பஸ், மார்க்கோ போலோ, வாஸ்கோ ட காமா, மெகல்லன், சர் பிரான்சிஸ் டிரேக், சர் வால்ட்டர் ராலி, ஜேம்ஸ் குக், டேவிட் லிவிங்ஸ்ட்டன், ராபர்ட்பியரி, ராபர்ட் ஸ்காட் முதலியவர்கள் புகழ்பெற்ற நாடாய்வாளர்களுள் சிலர் ஆவர்.
மேற்கோள்கள்[தொகு]
- "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.