வடசேரி கனகமூலம் சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகர்கோவில் வடசேரி பகுதியில் கனகமூலம் காய் கனி சந்தை உள்ளது. இங்கிருந்து காய் மற்றும் பழவகைகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் கனகமூலம் மகாராஜாவால், காய்கள் மற்றும் பழங்கள் இங்கு கொள்முதல் செய்யப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக இந்த சந்தை உருவாக்கப்பட்டது.

அன்றைய காலத்தில் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட சந்தை தற்போது 300 -இற்கும் மேற்பட்ட கடைகளுடன் இயங்கி வருகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கன்னியாகுமரி 2000 , தினமலர், நாள்.31.12.1999, ப. 13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடசேரி_கனகமூலம்_சந்தை&oldid=3716838" இலிருந்து மீள்விக்கப்பட்டது