சண்முகநாதன் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெளித்தோற்றம்

சண்முகநாதன் பொறியியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி ஆகும்.

சண்முகநாதன் பொறியியல் கல்லூரி உள்ளமைப்பு
குறிக்கோள்

அமைவிடம்[தொகு]

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகே அரசம்பட்டியில் அமைந்துள்ளது. காரைக்குடி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில்​, புதுக்கோட்டையில் இருந்து 15 கிமீ தொலைவிலும்​, காரைக்குடியில்​ இருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 200 ஹெக்டேர் பரப்பளவில் கல்லூரி அமைந்துள்ளது. ஆண்டிற்கு 500 மாணவர்கள் புதிதாக உள்ளே வருகின்றனர்.

நிர்வாகம்[தொகு]

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கல்லூரி இயங்குகிறது. 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] என்.எ.எ.சி மூலம் இக்கல்லூரிக்கு "பி" தரம் சான்றிதழ் அளிக்கப்பட்டது.[2] இந்நிறுவனத்தின் முதல்வர் முத்துராமு, செயலாளர் விஸ்வநாதன், நிறுவனர் மணிகண்டன் ஆவர்.

துறைகள்[தொகு]

  1. மின் மற்றும் மின்னணுவியல்
  2. மின் தகவல் தொடர்பு
  3. தகவல் தொழில்நுட்பம்
  4. இயந்திரப்பொறியில்
  5. தானூர்தி பொறியியல்
  6. கணினி துறை
  7. கட்டிடப்பொறியியல்

போன்ற துறைகளில் கற்பித்தல் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shanmuganathan Engineering College" (PDF). www.annauniv.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  2. "NAAC assessment letter" (PDF). naac.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.

வெளியிணைப்புகள்[தொகு]

கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளம்