மயிலம் முருகன் கோயில்

ஆள்கூறுகள்: 12°07′47.4″N 79°36′54.1″E / 12.129833°N 79.615028°E / 12.129833; 79.615028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயிலம் முருகன் கோயிலின் கோபுரம்
மயிலம் முருகன் கோயில்
ஆள்கூறுகள்:12°07′47.4″N 79°36′54.1″E / 12.129833°N 79.615028°E / 12.129833; 79.615028
அமைவிடம்
நாடு:இந்தியா
அமைவு:மயிலம்
ஏற்றம்:118 m (387 அடி)
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன் சுப்பிரமணியர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1000 ஆண்டுகளுக்கு முன்

மயிலம் முருகன் கோயில் திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது.[1]

கோயிலின் நுழைவுவாயில்

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 118 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°07'47.4"N, 79°36'54.1"E (அதாவது, 12.129835°N, 79.615016°E) ஆகும்.

வரலாறு[தொகு]

மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஆகும்.இங்குள்ள கோயில் சிறிய மலையில் அமைந்த கோயில் ஆகும். சோழமண்டல கடற்கரையில் உள்ள ஒரு கிராமத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ளது. இது பிராமணர்களுக்கு நன்கொடை அளித்த கிராமமாக இருந்தது.

சூரபத்மாவின் கொடூரமான ஆட்சியின் முடிவைக் கொண்டு இந்த தலத்தின் தல வரலாறு தொடங்குகிறது. சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதிராளியான அசுரமயோபாயத் தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தியும் தோல்வியுற்றார். இதன் பிறகு, சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி கண்ணீர் மல்க வேண்டியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

கண்ணீருடனான வேண்டுதலால் மனம் மாறிய முருகக்கடவுள் மயில மலை அருகே வராகா ஆற்றங்கரையில் மயில் வடிவத்தை எடுக்க மிகுந்த உறுதியுடன் தியானம் செய்யும்படி கட்டளையிட்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், சூரபத்மன் தான் அவ்வாறு தவம் செய்து மயில் வடிவத்தைப் பெறும் போது அதே மலையில் முருகன் நிரந்தரமாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. முருகன் அதற்கு இசைவு தெரிவித்ததாகவும், அதனால், இந்த மலை மயிலமலை என்றும் இந்த இடம் மயிலம் என்றும் குறிப்பிடப்படுவதாகத் தல வரலாறுகள் குறிப்பிடுகின்றன. மலையுச்சியில் உள்ள கோவில் பொம்மயாபுரம் மடாதிபதியால் சிறப்பான அளவில் கட்டப்பட்டது. மலையின் அடிவாரத்தில் நிறுவப்பட்ட மடம் கோவிலின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறது. இந்த நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.[2]

முருகனால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்ட போது அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி இந்தப்பகுதிக்கு வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்ததாகவும், தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்ததாகவும், அப்போது சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என முருகனிடம் வேண்டியதாகவும் மற்றொரு புராணத்தகவல் கூறுகிறது. மயில் வடிவ மலையாக இருந்து தான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் விளங்க வேண்டும் எனவும் முருகன் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் சூரபத்மன் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு முருகன் அவனிடம், ‘‘எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்ததாகவும் கூறப்படுகிறது. பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.[3]

திருவிழா[தொகு]

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

திறக்கும் நேரம்[தொகு]

காலை 6 மணி முதல் 12மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

வான்வழி[தொகு]

பாண்டிச்சேரி விமான நிலையமே இதன் அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். பாண்டிச்சேரி விமான நிலையம் இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்கள் இங்கிருந்து முறையே 205 கிலோமீட்டர் மற்றும் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.

இருப்புப்பாதை போக்குவரத்து[தொகு]

தெற்கு இரயில்வேயின் சென்னை-திண்டிவனம் முக்கிய இருப்புப்பாதை வழியில் மயிலம் அமைந்துள்ளது.

மயிலம் புகைவண்டி நிலையம் தினசரி 8 தொடர்வண்டிகளைக் (போக/வர) கையாள்கிறது. தினசரி சராசரியாக 12000 பயணிகளைக் கையாள்கிறது. தினசரி 4 புகைவண்டிகள் இந்த நிலையத்திலிருந்து புறப்பட்டு அல்லது கடந்து செல்கின்றன. அவை பின்வருமாறு பட்டியலிடப்பட்டு உள்ளன.

மயிலம் வந்து செல்லும் இரயில்களின் நேரம்
வண்டி எண் புகைவண்டியின் பெயர் புறப்படும் இடம் சேருமிடம்
56041 திருப்பதி பாண்டிச்சேரி பயணிகள் இரயில் திருப்பதி பாண்டிச்சேரி
66045 சென்னை கடற்கரை விழுப்புரம் சென்னை கடற்கரை விழுப்புரம்
66046 விழுப்புரம் மேல்மருவத்துார் பயணிகள் விழுப்புரம் சந்திப்பு மேல்மருவத்துார்
56042 பாண்டிச்சேரி திருப்பதி பயணிகள் இரயில் பாண்டிச்சேரி திருப்பதி

இந்த புகைவண்டி நிலையம் திருச்சிராப்பள்ளி, சென்னை, மதுரை(335 கி.மீ), இராமேஸ்வரம்(575 கி.மீ), பெங்களூரு(340 கி.மீ), வாரனாசி (2371 கி.மீ) ஆகியவற்றுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

சாலைப் போக்குவரத்து[தொகு]

தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் திண்டிவனத்திலிருந்து இடைநில்லாப் பேருந்து வசதிகளும், விரைவுப்பேருந்து வசதிகளும் காணப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/news/national/tamil-nadu/its-viluppuram-say-activists/article7390968.ece
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-12. பார்க்கப்பட்ட நாள் 2018-03-17.
  3. https://www.maalaimalar.com/Devotional/Temples/2017/07/31114226/1099545/mailam-murugan-temple-history.vpf

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலம்_முருகன்_கோயில்&oldid=3825242" இலிருந்து மீள்விக்கப்பட்டது