ஓரிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓரிக்கை காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் நகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. இது ஓரிக்கை ஊராட்சியாக இருந்து. பின்னர் காஞ்சிபுரம் நகராட்சியின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. இவ்விடம் பாலாறு மற்றும் வேகவதி ஆற்றின் இடையே அமையப்பெற்றுள்ளது இதன் சிறப்பாகும். ஓரிக்கையானது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பட்டுச் சேலைகள் நெய்வதற்கு தேவையான ஜரிகை நூல், தமிழ்நாடு அரசின் ஜரிகை நிறுவனம் 6 டிசம்பர் 1971 முதல் ஓரிக்கையில் செயல்படுகிறது.[1] சந்திரசேகர சரசுவதி சுவாமியின் மணி மண்டபம் மற்றும் கோயில்கள் ஓரிக்கையில் பாயும் பாலாற்றங்கரையில் 28 ஜனவரி 2011 அன்று நிறுவப்பட்டது. [2][3]

இவ்விடம் மக்கள் அதிகம் வாழும் குடியுருப்பு பகுதியாகவும், கல்வி நிலையங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களும் கொண்டுள்ளது. இவ்விடத்தின் அஞ்சல் சுட்டு எண் 631502 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. TAMILNADU ZARI LIMITED
  2. Sri Kanchi Periyava Manimandapam, Orikkai
  3. காஞ்சி மகாபெரியவா சந்திரசேகர சரஸ்வதி சுவாமி மணி மண்டபம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரிக்கை&oldid=3205808" இலிருந்து மீள்விக்கப்பட்டது