ஆர்க்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காவிரிக்கரை ஆர்க்காட்டை ஆண்ட அரசன் அழிசி. அவன் மகன் சேந்தன். இருவரும் அரசர்கள்.[1]

யானைப்படை கொண்ட பசும்பூண் சோழர் என்னும் சோழர் கால்வழி ஆர்க்காட்டில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்துவந்தது. இந்த ஆர்க்காட்டில் தேரோடும் தெருவில் கள்ளுப்பானையில் ஈ மொய்ப்பது போல மக்கள் கூடி ஆரவாரம் செய்வார்களாம். அந்த ஆரவாரம் போலத் தலைவன்-தலைவி கள்ளக் காதலைப்பற்றி ஊர்மக்கள் கௌவைமொழி பேசிக்கொண்டார்ளாம். [2]

இடையன் சேந்தன் கொற்றனார் என்பவர் புலவர். இவர் இடையர்.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவைக்களத்தில் இருந்த ஐவருள் ஒருவன் ஆதன் அழிசி. [3]

ஆதன், அழிசி, சேந்தன், கொற்றனார் என்னும் பெயர்கள் ஒரு கால்வழிப் பரம்பரையைக் காட்டுவது போல அமைந்திருந்தாலும், அவர்கள் இன்னின்னார் என்று இந்த விளக்கங்களை எண்ணிப்பார்த்தால் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்.

இது வடார்க்காடு மாவட்டத்திலுள்ள ஆர்க்காடு அன்று.

சான்று[தொகு]

  1. குறுந்தொகை 258, நற்றிணை 190
  2. நற்றிணை 227
  3. புறம் 71
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்காடு&oldid=2565859" இலிருந்து மீள்விக்கப்பட்டது