பிமல் ஜலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிமல் ஜலான்
2013ல் பிமல் ஜலான்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
27 August 2003 - 26 August 2009
முன்னையவர்சக்ரவர்த்தி ரங்கராஜன்
பின்னவர்ஒய். வி. ரெட்டி
20வது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
பதவியில்
4 செப்டம்பர் 2003 - 22 நவம்பர் 1997
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 ஆகத்து 1941 (1941-08-17) (அகவை 82)
இராஜ்கர், ராஜஸ்தான்,இந்தியா
தேசியம்இந்தியர்
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பிரசிடென்சிக் கல்லூரி
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்

பிமல் ஜலான் (பிறப்பு: 17 ஆகத்து, 1941) என்பவர் பொருளியல் துறை அறிஞர் மற்றும் வங்கியாளர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் தலைவராக இரண்டு முறை பதவி வகித்தவர்.[1] இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினராகவும் இருந்தவர்.

வகித்த பதவிகள்[தொகு]

கொல்கத்தா பிரசிடென்சிக் கல்லூரியிலும், பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக் கழகங்களிலும் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகங்களிலும் கல்வி பயின்ற பிமல் ஜலான் 1980 களில் இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆலோசகராகவும், 1985- 89 களில் வங்கிச் செயலாளராகவும், 1991-92 இல் நிதி அமைச்சகத்தின்  நிதிதுறைச் செயலாளராகவும் இருந்தார். 1992 -1993 லும் 1998-2008லும் சார்பு பொருளியல் ஆராய்ச்சி தேசியக் குழுவின் தலைவராக இருந்தார். 1997 முதல் 2003 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார்.[2]

ஐஎம்எப் மற்றும் உலக வங்கி ஆகிய பன்னாட்டு நிதி நிறுவனங்களில் இந்தியா சார்பாக உறுப்பினர் மற்றும் செயலர் பதவிகளில் இருந்தார்.

எழுதிய நூல்கள்[தொகு]

பொருளியல், வங்கியியல் தொடர்பான நூல்களை எழுதியுள்ளார். இந்தியப் பொருளியல் சிக்கல்கள், 21 ஆம் நூற்றாண்டு ஆயத்த இந்தியப் பொருளியல் கொள்கை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

சான்றாவணம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிமல்_ஜலான்&oldid=3439488" இலிருந்து மீள்விக்கப்பட்டது