கணாதரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணாதரர் (ஆங்கிலம்: Ganadhara), சமண சமயத் தீர்த்தங்கரரின் தலைமை மாணக்கர் ஆவார். இவர் தன் குருவான தீர்த்தங்கரின் உபதேசங்களை மக்களிடம் எடுத்துச் செல்பவர் ஆவார்.[1]

சமணச் சங்கங்கள் ஒவ்வொன்றும் கணங்கள் எனும் கணாதரர் தலைமையின் கீழ் இயங்குகிறது.[2][3]

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்சு மாவட்டத்தில் தீர்த்தங்கரர்கள் மற்றும் கணாதரர்களின் சிற்பங்கள் பொ.ஊ. 20-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[4]

24 தீர்த்தங்கரர்களின் கணாதரர்கள்[தொகு]

எண் தீர்த்தங்கரர் எண்ணிக்கை புகழ்பெற்ற கணாதரர்கள்
1 ரிசபதேவர் (ஆதிநாதர்) 84 விருசபா சென், கச்சா, மகா கச்சா, நாமி, விநாமி[5]
23 பார்சுவநாதர் 8 கேசி, சுபதத்தா, ஆரியகோசா, வசிஷ்டர், பிரம்மச்சாரி, சோமன், ஸ்ரீதரர், வீரபத்திரர் மற்றும் யசாஸ்
24 மகாவீரர் 11 இந்திரபூதி கௌதமன், சுதர்மசுவாமி

கணாதரர் விருசப சென்[தொகு]

சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான மன்னர் ரிசபதேவரின் தலைமை மாணாக்கர் விருசப சென் ஆவார். ரிசபதேவரின் மறைவால், அவரது பட்டத்து மகன் சக்ரவர்த்தி பரதன் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார். காணப்பட்டார். விருசப சென் பரதனுக்கு ஆறுதல் கூறினார்.[6] பின் பரதன் தன்னிலை அடைந்து கணாதரர் விருசப சென்னின் கால்களைத் தொட்டு வணங்கி இராச்சியத்தை ஆளத் தொடங்கினார்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Jain 2008, ப. 95.
  2. "The Early Centuries of Jainism". Archived from the original on 2017-02-01. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  3. Jain Agama Literature
  4. Nagendra-Natha Vasu, The archaeological survey of Mayurabhanja, p. xivi
  5. Jain 2008, ப. 126.
  6. Champat Rai Jain (1929). "XI. Ganadhara Vrisabha Sen". Risabha Deva - The Founder of Jainism. K. Mitra, Indian Press, Allahabad. பக். 189. https://archive.org/details/RisabhaDeva-TheFounderOfJainism. 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணாதரர்&oldid=3830827" இலிருந்து மீள்விக்கப்பட்டது