கிசுகோ வட்டாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிசுகோ(ஆங்கிலம்:Kisko இந்தி: किसको ) இந்தியாவின் யார்க்கண்டு மாநிலம், லோகர்தக்கா மாவட்டத்திலுள்ள ஒரு நிர்வாக வட்டாரமாகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

லோகர்தக்கா மாவட்டத்தின் கிழக்கு மண்டலத்தில் 65 கிராமங்களை உள்ளடக்கிய 14 கிராம பஞ்சாயத்துகள் கொண்டதாக கிசுகோ வட்டாரம் அமைந்துள்ளது. இவ்வட்டாரத்தின் மொத்த மக்கள் தொகை 83922 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 41,989 நபர்கள் ஆண்களாகவும், 41,933 நபர்கள் பெண்களாகவும் உள்ளனர். 6 வயதுக்கு கீழுள்ளவர்களாக 14,568 சிறுவர்கள் இங்கு வாழ்கின்றனர்.

மொழிகள்[தொகு]

ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய மொழியான அசுரி மொழி உள்ளிட்ட மொழிகளை 17000 நபர்கள் பேசுகின்றனர்[1]. இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த வட இந்திய மொழியான போச்புரி மொழியை 40 000 000 நபர்கள் பேசுகின்றனர்[2]. தேவநாகரி மற்றும் கைத்தி எழுத்துகள் இரண்டையும் இவர்கள் எழுதினர். வட்டாரத்தின் மையப்பகுதியில் கிசுகோ பசார் என்ற ஒரு சிறிய சந்தை வணிக சேவையை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Asuri: A language of India". Ethnologue: Languages of the World (16th). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  2. "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசுகோ_வட்டாரம்&oldid=2176042" இலிருந்து மீள்விக்கப்பட்டது