திருக்குறையலூர் உக்ர நரசிம்மபெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறையலூர் உக்ர நரசிம்மபெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருநகரியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மங்கைமடத்திற்கு முன்பாக அமைந்துள்ளது.


இறைவன், இறைவி[தொகு]

உக்ரசிம்மப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கருவறையில் உள்ளார். இறைவன் வெள்ளிக்கவசம் அணிந்து சாளக்ராம மாலையுடன் கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் காணப்படுகின்றார். [1]

பிற சிறப்புகள்[தொகு]

பஞ்ச நரசிம்மத்தலங்களில் முதல் தலமாகும். திருமங்கை மன்னனும் அவரது தேவியான குமுதவல்லியும் இக்கோயிலில் உள்ளனர். திருமங்கையாழ்வார் அடியார்க்ளுக்கு அன்னதானம் செய்த சிறப்பினைப் பெற்ற தலமாகும். இக்கோயிலுக்கு அருகே திருநாங்கூரைச் சேர்ந்த 11 திவ்யதேசங்களும், மங்கைமடம் வீரநரசிம்மப்பெருமாள் கோயிலும் உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014