மணிச்சிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குன்றிமணிச் செடி

மணிச்சிகை என்பது குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகத் தொகுத்துக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. [1]

இந்த மலர் பற்றிய செய்தி வேறு சங்கப்பாடல்களில் இல்லை. என்றாலும் இந்த மலரின் பெயரைக்கொண்டு இந்த மலர் இன்னதென உணரமுடிகிறது.

மணி என்னும் முன்னொட்டு மணியாங்கல் என்னும்போது சிறிய கல்லை உணர்த்தும். மண் < மணல் என்பனவும் இச்சொல்லின் வேரிலிருந்து தோன்றியவை.

மணி அன்ன நீர் புறநானூறு 137-11
மணி அன்ன மாமை கலித்தொகை 48-17
மணியாரம் (மாணிக்க மணி ஆரம்) புறநானூறு 365-4
மணியிருங்கதுப்பு (கருநிற முடி) நற்றிணை 214-5
மணி இழந்த நாகம் (நீலநிற நஞ்சு இழந்த நாகம்) சிலப்பதிகாரம் 13-58
மணி இழந்த பாம்பு (நீலநிற நஞ்சு இழந்த பாம்பு) அகநானூறு 392-13
மணி ஏர் ஐம்பால் (நீல நிற ஐம்பால் கூந்தலை) நற்றிணை 133
மணியேர் நெய்தல் (நீல நிற அழகிய தெய்தல்) நற்றிணை 78
மணிகடல் (நீலநிறக் கடல்) சிலப்பதிகாரம் 30-30

முதலான சொற்களில் மணி என்பது கருநீல நிறத்தையும், கருநிறத்தையும் உணர்த்துதலைக் காணலாம்.

இதனை மனத்திற்கொண்டு நீல(கரு)நிறத்தை உச்சியில் கொண்ட குன்றிமணியைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றர். ஆயின் இது குன்றிமணியைக் குறிக்கும்.

படங்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு[தொகு]

  1. குறிஞ்சிப்பாட்டு 64
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிச்சிகை&oldid=1617041" இலிருந்து மீள்விக்கப்பட்டது