திருவாழி-திருநகரி கோயில்கள்

ஆள்கூறுகள்: 11°13′32″N 79°47′58″E / 11.22556°N 79.79944°E / 11.22556; 79.79944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவாழி-திருநகரி கோயில்கள்
திருவாழி-திருநகரி கோயில்கள் is located in தமிழ் நாடு
திருவாழி-திருநகரி கோயில்கள்
திருவாழி-திருநகரி கோயில்கள்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°13′32″N 79°47′58″E / 11.22556°N 79.79944°E / 11.22556; 79.79944
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவு:திருவாழி மற்றும் திருநகரி
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:2

திருவாழி-திருநகரி கோயில்கள் (Thiruvali - Thirunagari Temples) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள் ஆகும். இவ்விரட்டைக் கோயில்கள் 108 திவ்ய தேசங்களில் 34-ஆவது இடத்தில் உள்ளது.[1] இக்கோயில்கள் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.

இரட்டைத் தலங்கள்[தொகு]

திருவாழி - திருநகரி இரட்டைத் தலங்களில், திருவாழியில் அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

திருவாழி[தொகு]

திருவாழி தலத்தில் மேற்கு நோக்கி திருவாழி அழகியசிங்கர் கோயில் அமைந்துள்ளது. தாயார் பெயர் பூர்ணவல்லி நாச்சியார்.

திருநகரி[தொகு]

திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊரான திருநகரியில் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் பெயர் வேதராஜன்; தாயார் பெயர் அமிர்தவள்ளி நாச்சியார். இக்கோயில் விமானம் 7 நிலைகளைக் கொண்டது.

விழாக்கள்[தொகு]

இத்தலத்தில் ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா நடைபெறுகிறது. தை மாதத்தில் திருநாங்கூர் 11 திருப்பதிகளிலிருந்து உற்சவர்கள் கருடவாகனத்தில் இக்கோயிலுக்கு எழுந்தருளி கருட சேவை நடைபெறும்[2] அவ்வமயம் திருமங்கை ஆழ்வாரையும், அவரது நாச்சியாரான குமுதவள்ளியையும் பல்லக்கில் அமரவைத்து, திருவாழி – திருநகரி அருகில் உள்ள திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுக்குச் எழுந்தருளச் செய்து, திருமங்கை ஆழ்வார் அருளிய நாலாயிர திவ்வியப் பிரபந்த பாசுரங்களைப் பாடுவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 34. திருவாலி – திருநகரி
  2. "Garuda Sevai'". [1]. http://www.ibiblio.org/sripedia/ramanuja/archives/feb08/pdfUQOxvBFB4v.pdf. பார்த்த நாள்: 2011-08-19.