இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் ஆங்கிலேய – சீக்கியர் போர்

பஞ்சாப் பகுதியின் வரைபடம், ஐந்து ஆறுகளின் நிலம்
நாள் 18 ஏப்ரல் 1848 – 30 மார்ச் 1849
இடம் பஞ்சாப்
கிழக்கிந்திய கம்பெனிக்கு வெற்றி; சீக்கியப் பேரரசு முடிவுற்றது.
பிரிவினர்
கிழக்கிந்திய கம்பெனி சீக்கியப் பேரரசு

இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் (Second Anglo-Sikh War), சீக்கியப் பேரரசுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1848 முதல் 1849 முடிய நடைபெற்றது. இப்போரின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனி வெற்றி பெற்று, சீக்கிய பேரரசின் ஆட்சி முடிவுற்றது.[1]

சீக்கியப் பேரரசில் இருந்த பஞ்சாப், ஆப்கானித்தான் பகுதிகளை ஆங்கிலேயர்கள் தக்க வைத்துக் கொண்டு, காஷ்மீர், லடாக் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை, இராசபுத்திர குலத்தின் டோக்ரா வம்சத்தின் ஜம்மு மன்னர் குலாப் சிங்கிடம் 75 இலட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர்.[2] இதனால் புதிய ஜம்மு காஷ்மீர் இராச்சியம் உருவானது.

போருக்கான பின்புலம்[தொகு]

மகாராஜா ரஞ்சித் சிங் காலத்தில் சீக்கியப் பேரரசு விரிவடைந்து கொண்டிருந்த காலத்தில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தங்கள் நிலப்பரப்பை இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கிலும், வடமேற்கிலும் விரிவாக்கம் செய்து கொண்டிருந்தனர்.

முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போருக்குப் பின்பும், சீக்கியர்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகாமையே இரண்டாம் ஆங்கிலேய சீக்கியப் போருக்குக் காரணமாயிற்று.[3]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. history.com/sikhhist/events/anglosikhwars2.html Second Anglo Sikh War[தொடர்பிழந்த இணைப்பு]
  2. காஷ்மீர் வரலாறு: 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை
  3. "Why the Second Anglo Sikh War did take place?". Archived from the original on 2016-10-08. பார்க்கப்பட்ட நாள் 2016-09-27.

மேற்கோள்கள்[தொகு]

மேல் வாசிப்பிற்கு[தொகு]