முதலாம் ருத்திரதாமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் ருத்ரதாமன்
மேற்கு சத்ரபதி
கிரேக்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட முதலாம் ருத்ரதாமனின் நாணயம், பிரித்தானிய அருங்காட்சியகம்
ஆட்சிகி பி 130–150
முதலாம் ருத்திரதாமனின் வெள்ளி நாணயம்
' "OVONIΛOOCVΛCHΛNO" எனும் கிரேக்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.

முதலாம் ருத்திரதாமன் (ஆட்சிக் காலம்:130–150), மேற்கு இந்தியாவை ஆண்ட மகா சத்திரபதி ஆவார். இவர் சகர்கள் இனத்தை சேர்ந்த மேற்கு சத்ரபதி பேரரசர் சஸ்தானவின் பேரன் ஆவார்.[1]சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்கு முதலாம் ருத்திரதாமன் காரணமானார்.

வரலாறு[தொகு]

சக குலத்தைச் சேர்ந்த முதலாம் ருத்தரதாமன், தன்னை மகா சத்திரபதியாக அறிவித்துக் கொண்டு, பரத கண்டத்தின் மேற்கு பகுதிகளை கி பி130–150 முடிய ஆண்டவர். இவர் ஒரு இந்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, தானும் இந்து சமயத்தவராக மாறியவர்.[2][3]

சாதவாகனர்களின் மீதான வெற்றி[தொகு]

முதலாம் ருத்திரதாமன் சாதவாகனர்களுடன் திருமண உறவுகள் கொண்டிருந்தான். தன் மருமகனான வசிஷ்டிபுத்திர சதகர்ணிக்கு திருமணப் பரிசாக, அபராந்தா எனும் நிலப்பரப்பை வழங்கினான்.

ருத்திரதாமன் தற்கால அரியானாவின் யௌதேயர்களை வென்றதாக கிர்நார் மலைக் கல்வெட்டுகள் கூறுகிறது.[4]

கல்வெட்டுக் குறிப்புகள்[தொகு]

அசோகரின் ஜூனாகத் கல்வெட்டுகளுடன், ருத்திரதாமன் மற்றும் ஸ்கந்தகுப்தரின் கல்வெட்டுக் குறிப்புகள்
முதலாம் ருத்திரதாமனின் ஜூனாகத் சமசுகிருத கல்வெட்டின் ஒரு பகுதி

கிபி 150 காலத்திய முதலாம் ருத்திரதாமனின் ஜுனாகத் சமசுகிருத மொழி கல்வெட்டு மூலம்[5] அவர் இந்துப் பண்பாடு, கலை மற்றும் சமஸ்கிருத மொழிக்கு அளித்த ஆதரவு தெரியவருகிறது. credits Rudradāman I with supporting the cultural arts and Sanskrit [[File:Ashoka Rock Edict at Junagadh.jpg|thumb| அசோகரின் ஜூனகாத் பாறைக் கல்வெட்டில், முதலாம் ருத்திரதாமன் மற்றும்

கிரேக்க எழுத்தாளர் யவனஸ்வரர் கிரேக்கத்திலிருந்து சமஸ்கிருதத்திற்கு யவன ஜாதகா நூலை மொழி பெயர்த்தபோது, ஆட்சி செய்த அரசர் என்றும் ருத்ரதாமன் என அறியப்படுகிறார். இது இந்தியாவில் ஜோதிடத்தின் மீது தாக்கம் செய்தது. ருத்ரதாமன் உஜ்ஜயினியிலிருந்து ஆட்சி செய்ததாக நம்புகிறார்கள்.

வீழ்ச்சி[தொகு]

போர்க் குணம் கொண்ட யௌதேயர்களாலும், நாகர் இனத்தவர்களாலும், ருத்தரதாமனின் பேரரசு வீழ்ச்சி காணத் தொடங்கியது.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Page 9, Journal of the Bombay Branch of the Royal Asiatic Society, Volume 7, Asiatic Society of Bombay, Publisher: The Society, 1867, Original from Harvard University, Digitized 14 Jun 2008
  2. Divatia 42
  3. Page 45, Buddhist critical spirituality: Prajñā and Śūnyatā, by Shōhei Ichimura, Motilal Banarsidass Publishers (2001), ISBN 81-208-1798-2, ISBN 978-81-208-1798-2
  4. Rosenfield, "The dynastic art of the Kushans", p132
  5. "Source". Groups.mcs.st-and.ac.uk. Archived from the original on 30 செப்டெம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2008.

மேற்கோள்கள்[தொகு]

  • Todd, James - The Annals and Antiquities of Rajasthan, Rajputana Publications, 1942
  • Michell, George - PRINCELY RAJASTHAN - Rajput Palaces and Mansions, Oriental Books, 1992
  • Rosenfield, "The dynastic art of the Kushans"
  • Divatia, N. B. (1993). Gujarati Language and Literature. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0648-5. 
  • Buddhist critical spirituality: Prajñā and Śūnyatā, by Shōhei Ichimura, Motilal Banarsidass Publishers (2001), ISBN 81-208-1798-2

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
ஜெயதாமன்
சத்திரபதி
கி பி 130–150
பின்னர்
முதலாம் தாமஜதாசிறீ
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_ருத்திரதாமன்&oldid=3781695" இலிருந்து மீள்விக்கப்பட்டது