டி. ஜெ. அம்பலவாணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதி வணக்கத்துக்குரிய
டி. ஜே. அம்பலவாணர்
யாழ் ஆயர்
சபைதென்னிந்தியத் திருச்சபை
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம்30 சூன் 1971
ஆட்சி முடிவு28 பெப்ரவரி 1993
முன்னிருந்தவர்எஸ். குலேந்திரன்
பின்வந்தவர்எஸ். ஜெபநேசன்
பிற தகவல்கள்
பிறப்பு(1928-02-28)28 பெப்ரவரி 1928
இறப்பு10 அக்டோபர் 1997(1997-10-10) (அகவை 69)
படித்த இடம்பரி. யோவான் கல்லூரி
யாழ்ப்பாணக் கல்லூரி
செரம்பூர் கல்லூரி]]

அதி வணக்கத்துக்குரிய தாவீது செயரத்தினம் அம்பலவாணர் (David Jeyaratnam Ambalavanar, பெப்ரவரி 28, 1928 - அக்டோபர் 10, 1997) இலங்கைத் தமிழ் போதகர் ஆவார். இவர் 1971 முதல் 1993 வரை தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆயராகப் பணியாற்றினார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அம்பலவாணர் 2928 பெப்ரவரி 28 இல்[1][2] வண. யோசப் பொன்னம்பலம் அம்பலவாணர், அன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தார். யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி (1932–42), யாழ்ப்பாணக் கல்லூரி (1942-50). ஆகியவற்றில் கல்வி கற்றார்.[1] பின்னர் இவர் இந்தியா சென்று மேற்கு வங்கம் செரம்பூர் கல்லூரியில் 1955 இல் இறையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] 1959 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] 1968 இல் இலண்டன் கிங்சு கல்லூரியில் இறையியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அம்பலவாணர் சந்திரராணி கணபதிப்பிள்ளை என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு தேவதர்சன், தேவதயாளன் என இரு மகன்கள் உள்ளனர்.[1]

பணி[தொகு]

1955 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் அம்பலவாணர் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் மறைமாவட்ட மறைப்பரப்புனராக பணியில் சேர்ந்தார்.[1] 1971 சூன் 30 இல் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்மறைமாவட்டத்துக்கான 2வது ஆயராக நியமிக்கப்பட்டார்.[1][2] 1993 பெப்ரவரி 28 இல் இளைப்பாறினார்.[1][2]

அம்பலவாணர் யாழ்ப்பாணக் கல்லூரியின் பணிப்பாளர் சபையின் தலைவராகப் பணியாற்றினார்.[2] ஈழப்போரின் போது பொதுமக்களின் இழப்புகளுக்காக அம்பலவாணர் குரல் கொடுத்தார்.[1]

மறைவு[தொகு]

அம்பலவாணர் சிறிது காலம் சுகவீனமுற்ற நிலையில் 1997 அக்டோபர் 10 இல் யாழ்ப்பாண மருத்துவமனையில் தனது 69ஆவது அகவையில் காலமானார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஜெ._அம்பலவாணர்&oldid=3327598" இலிருந்து மீள்விக்கப்பட்டது