தஞ்சாவூர் ஜனார்த்தனப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனார்த்தனப் பெருமாள் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:ஜனார்த்தனப் பெருமாள்

தஞ்சாவூர் ஜனார்த்தனப் பெருமாள் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் எல்லையம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது.

தேவஸ்தான கோயில்[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1]

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவராக ஸ்ரீதேவி பூதேவியுடன் வாசுதேவப்பெருமாள் (ஜனார்த்தனப்பெருமாள்) உள்ளார். இறைவி கமலவல்லித்தாயார் ஆவார்.

அமைப்பு[தொகு]

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம் உள்ளது. அடுத்து கருடாழ்வார் உள்ளார். இரு துவாரபாலகர்கள் இரு புறமும் உள்ளனர். அடுத்த மண்டபத்தில் கருவறை முன்பாக இரு துவாரபாலகர்கள் இரு புறமும் உள்ளனர். மூலவர் கருவறையை ஒட்டி தாயார் சன்னதி உள்ளது.

நவநீத சேவை[தொகு]

நவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [2] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

தட்சிண சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்[தொகு]

திருச்சுற்றில் அனுமார் சன்னதியாக தட்சிண சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் என்றழைக்கப்படுகின்ற சிறிய கோயில் உள்ளது. இக்கோயிலும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் ஒன்றாகும்.[1]

குடமுழுக்கு[தொகு]

இந்த இரு கோயில்களுக்கும் 15.12.2006 அன்று குடமுழுக்கு நடைபெற்றதற்கான தனித்தனியாக இரு கல்வெட்டுகள் கோயிலின் மண்டபத்தில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் சுவற்றில் பதிக்கப்படாமல் தனியாக வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
  2. தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை, மாலை மலர், 30 மே 2016[தொடர்பிழந்த இணைப்பு]