நகர்வாலா ஊழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகர்வாலா ஊழல் (1971 Nagarwala scandal) என்பது 1971 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த ஒன்று.

ருஸ்தும் சோரப் நகர்வாலா என்பவர் அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி பேசுவது போல குரலை மாற்றிக் கொண்டு, தொலைபேசியில் வங்கி (SBI) தலைமைக் காசாளர் வேத் பிரகாசு மல்கோத்ராவிடம் உரையாடி, அறுபது லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மாநில வங்கியிலிருந்து பெற்று ஏமாற்றினார்[1]. உண்மை வெளிவந்ததும் நகர்வாலா கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். 4 ஆண்டு கால சிறைத் தண்டனையும் அடைந்தார். ஆனால் சிறையிலேயே இறந்து போனார்[2]. இந்த ஏமாற்று இந்திய அரசியலில் பெரும் சச்சரவையும் புயலையும் ஏற்படுத்தியது.

மேற்கோள்கள்[தொகு]

http://www.telegraphindia.com/1030627/asp/nation/story_2107442.asp

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர்வாலா_ஊழல்&oldid=2981540" இலிருந்து மீள்விக்கப்பட்டது