தசார்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தசார்னம் (Dasharna) (சமஸ்கிருதம்:दशार्ण Daśārṇa) பண்டைய பரத கண்டத்தின், கிழக்கு மால்வா பகுதியில் இருந்த ஜனபத நாடுகளில் ஒன்றாகும். இதன் தலைநகர் தற்கால விதிஷா ஆகும்.

தசான் ஆறு மற்றும் பேட்வா ஆறுகளுக்கிடையே, மால்வா பகுதியில் தசார்ன நாடு அமைந்திருந்தது. [1] தசார்ன ஜனபத நாட்டை அக்காரா என்றும் அழைப்பர்.[2] மேலும் முதலாம் ருத்திரதாமனின் ஜூனாகத் கல்வெட்டுகளில் தசார்ன நாட்டை அக்காரா என்று குறித்துள்ளார்.[3]

மகாபாரதக் குறிப்புகள்[தொகு]

மகாபாரதக் குறிப்புகளின் படி, சேதி நாட்டு மன்னர் வீரபாகுவின் மனைவியும்; விதர்ப்ப நாட்டு மன்னர் பீஷ்மகனின் மனைவியும், தசார்ன நாட்டு மன்னரின் மகள்கள் ஆவார்.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pandey, S.K. (1981). The Protohistoric Chronology of Daśārṇa Region in M.D. Khare ed. Malwa through the Ages, Bhopal: Directorate of Archaeology & Museums, Govt. of M.P., p.81
  2. Lahiri, Bela (1972). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D.), Calcutta: University of Calcutta, p.78
  3. "Junagarh rock inscription". Archived from the original on 2009-02-23. பார்க்கப்பட்ட நாள் 2016-07-21.
  4. Raychaudhuri, H.C. (1972). Political History of Ancient India, Calcutta: University of Calcutta, p.115n
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசார்னம்&oldid=3556962" இலிருந்து மீள்விக்கப்பட்டது