வெல்லமண்டி நடராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெல்லமண்டி. நல்லுசாமி. நடராசன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். பத்தாம் வகுப்புவரை படித்துள்ள இவருக்கு சரோஜாதேவி என்ற மனைவியும், கிருபாகரன், ஜவஹர்லால் நேரு ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் கட்சியில் பணியாற்றி வருகிறார். இவர் சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது கட்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவராக இருந்தார். 2016 ஆண்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், சுற்றுலா துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. Archived from the original on 2016-05-25. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெல்லமண்டி_நடராசன்&oldid=3578299" இலிருந்து மீள்விக்கப்பட்டது