ஓர்ச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர்ச்சா
ओरछा
நகரம்
ஓர்ச்சா அரண்மனை
ஓர்ச்சா அரண்மனை
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்நிவாரி
ஏற்றம்552 m (1,811 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்8,501
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு எண்07680
வாகனப் பதிவுMP-36
இணையதளம்www.ramrajatempleorchha.com

ஓர்ச்சா (Orchha or Urchha) இந்தியாவின் மத்தியப் பிரதே மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் நிவாரி மாவட்டத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். ஓர்ச்சா நகரத்தை சந்தேல இராஜபுத்திர மன்னர் ருத்திரபிரதாப சிங் என்பவரால் 1531-இல் நிறுவப்பட்டது. இந்திய விடுதலை அடையும் வரை, பிரித்தானிய இந்திய அரசில் ஓர்ச்சா சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது.

பேட்வா ஆற்றாங்கரையில் அமைந்த கோட்டையுடன் கூடிய ஓர்ச்சா நகரம், ஜான்சியிலிருந்து 15 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

ஓர்ச்சா நகரத்தின் கோட்டை வளாகத்தை[2] தற்காலிக உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக சேர்க்க இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யுனெஸ்கோவை அணுகியுள்ளனர். [3]

மக்கள் தொகையியல்[தொகு]

2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஓர்ச்சா நகரத்தின் மக்கள் தொகை 8,501 ஆகும்[4] அதில் ஆண்கள் 53% ஆகவும்; பெண்கள் 47% ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 54% ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழுந்தைகள் 18% ஆகும்.

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Orchha". Tikamgarh district website. Archived from the original on 2019-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
  2. Orchha Fort complex
  3. MP's Orchha makes it to tentative list of UNESCO World Heritage Sites
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Orchha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Pictures
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓர்ச்சா&oldid=3635328" இலிருந்து மீள்விக்கப்பட்டது