முகம்மது அப்துல் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்-ஹாஜ் நவாப் குலாம் முகம்மது அப்துல் அலி கான் பகதூர் (பிறப்பு 9 ஆகத்து 1951) தற்போதைய ஆற்காடு இளவரசராக பட்டம் ஏற்றிருப்பவராவார். இவர் 1993 சூலையில் தமது தந்தை குலாம் முகம்மது அப்துல் காதிரின் மறைவிற்குப் பிறகு இப்பட்டத்திற்கு உரியவரானார்.[1] இவரது குடும்பத்தினர் இரண்டாவது கலீபாவான உமறு இப்புனு அல் கத்தாபின் வழித்தோன்றல்களாவர்.[2]

ஆற்காடு இளவரசர் என்ற நிலையில் இவர் பல சமய அறக்கட்டளைகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் தலைவராக உள்ளார். மக்கா, மதீனா நகரங்களை நிருவகிக்கும் வக்பு குழுவின் உறுப்பினராக உள்ளார்.[சான்று தேவை] அரச விழாக்களிலும் வரவேற்புகளின் போதும் ஆற்காடு இளவரசருக்கு தமிழ்நாட்டின் ஆய அமைச்சர்களுக்கு இணையான நிலை வழங்கப்படுகிறது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Staff writers (1 February 2004). "Web site on Nawabs of the Carnatic". The Hindu. Archived from the original on 18 பிப்ரவரி 2004. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகஸ்ட் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. Staff writers (15 August 2004). "Web site on Nawabs of the Carnatic". The Hindu. Archived from the original on 22 டிசம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகஸ்ட் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அப்துல்_அலி&oldid=3567861" இலிருந்து மீள்விக்கப்பட்டது