காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் அகத்தியேச்சரம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் அகத்தியேச்சரம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அகத்தீஸ்வரர்.

காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் (அகத்தியேச்சரம் - (திருவேகம்பம்) எனப்போற்றும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். இச்சிவலிங்கம், காஞ்சி திருவேகம்பத்தின் முதல் பிரகார தென்பாகத்தில் அமைந்துள்ளது. மேலும், அகத்திய முனிவர் வழிப்பட்டதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

தல சிறப்பு[தொகு]

விந்திய மலையின் இறுமாப்பை அடக்க தேவர்கள் வேண்டியவாறு காசியில் வசித்திருந்த அகத்திய முனிவர் காஞ்சிக்கு வந்தபோது. அக்காஞ்சி சான்றோரையுடைத்தாய் இருக்கும் சிறப்பை நாடி இவ்விடத்தில் நாம் தேவர்கள் சொல்லியவண்ணம் வெளிபடுத்த வெண்ணியிருக்கும் இனிமையுடைய தாகிய தமிழை வெளியாக்கல் வேண்டும் என்று பூசித்தனர்.[2]

தல வரலாறு[தொகு]

விந்திய மலையின் செருக்கினை அடக்கிய அகத்தியர், ஏகம்பத்திற்கு தென்பகுதியில் அகத்தியலிங்கம் (தன் பெயரில்) பிரதிட்டை செய்து தொழுதார் என்பது வரலாறாகும்.[3]

தல பதிகம்[தொகு]

  • பாடல்: (அகத்தியேச்சர வரலாறு)
பண்ணிசைந்த வரிச்சுரும்பர் பாடல் பயிலும் மலர் இலைஞ்சித்,
தண்ணிசைந்த சிவகங்கைத் தழங்குந் திரைநீர் குடைந்தாடிப்,
பெண்ணிசைந்த பெருவனப்பின் பிராட்டி
ஆங்குப் பிறங்கொளியால், கண்ணிசைந்த களிசிறப்ப அகத்தியேசங்
கண்டணைந்தாள்.
  • பொழிப்புரை:
பண்ணமைந்த பாடல் வண்டு பாடுதற் கிடனாகிய பூக்களைக் கொண்ட
பொய்கையாகிய குளிர்ந்த சிவகங்கை எனும் ஒலிக்கும் அலைகளையுடைய
தீர்த்தத்தில் மூழ்கித் திளைத்து பெண்ணியல்பமைந்த பேரழகினையுடைய
பெருமாட்டியார் அங்கே விளங்கொளியால் கருத்திற்கியைந்த களி துளும்ப
அகத்தியர் அருச்சித்த அகத்தியே சத்தினைக் கண்டு நெருங்கினர்.[4]

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் காஞ்சி திருவேகம்பத்தின் முதல் பிரகார தென்பாகத்தில் இச்சிவலிங்க மூர்த்தம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்ப அகத்தில் அகத்தீசுவர மூர்த்தம் தாபிக்கப்பட்டுள்ளது.[5]

போக்குவரத்து[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 61. தழுவக்குைழந்த படலம் (2023- 2449) | 2205 அகத்தியேச்சர வரலாறு
  2. "palsuvai.ne | 10. அகஸ்தீஸ்வரர் | காஞ்சிபுர சிவலிங்கங்கள்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-15.
  3. "shaivam.org | அகத்தியேச்சரம் - (திருவேகம்பம்)". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-15.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | தழுவக் குழைந்த படலம் | அகத்தியேச்சர வரலாறு | பாடல்: 183 | பக்கம்: 639 - 640
  5. dinaithal.com | அகத்தியேச்சரம் - (திருவேகம்பம்) அகத்தீசுவரர் கோயில்
  6. tripadvisor.in 15 temples in Kanchipuram

புற இணைப்புகள்[தொகு]