பனித்திட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனித்திட்டு
Pannithittu
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண் -->607 402
அஞ்சல் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

பனித்திட்டு (Pannithittu) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். தேசிய நெடுஞ்சாலை 45ஏ - க்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. மேலும் பனித்திட்டு கிராமத்தில் மலட்டாறு வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

எல்லைகள்[தொகு]

மேற்கில் கிருமாம்பாக்கம், வடக்கில் மலட்டாறு, கிழக்கில் வங்காள விரிகுடா தெற்கில் பிள்ளையார் குப்பம் ஆகியன பனித்திட்டு கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.

கிராமங்கள்[தொகு]

பனித்திட்டு கிராமப் பஞ்சாயத்தின் கீழ் பின்வரும் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

  • பனித்திட்டு
  • ஆலடிமேடு
  • ஈச்சங்காடு
  • வம்பாபேட்டை

சாலைப் போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 45ஏ – கிருமாம்பாக்கம் சாலை வழியாக பனித்திட்டு கிராமம் புதுச்சேரியுடன் இணைகிறது. மேலும் பனித்திட்டு கிராமம், பிள்ளையார் குப்பம், மணப்பட்டு வழியாக புதுக்குப்பத்துடன் இணைந்துள்ளது. இதைத்தவிர ரெட்டிச்சாவடியிலிருந்து பனித்திட்டு வழியாக செல்லக்கூடிய மற்றொரு முக்கிய சாலை வசதியும் இங்குண்டு.

அரசியல்[தொகு]

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ,ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் பனித்திட்டு கிராமம் இருக்கிறது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-25.

புற இனைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனித்திட்டு&oldid=3562427" இலிருந்து மீள்விக்கப்பட்டது