விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 28, 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எருசலேம் முற்றுகை என்பது கி.பி. 70 இல் இடம்பெற்ற முதலாம் யூத-உரோமைப் போரின் இறுதி நிகழ்வாகும். கி.பி. 66 இல் யூத பாதுகாவலர்களால் கைப்பற்றப்பட்ட எருசலேம், அன்றைய எதிர்கால பேரரசரான தித்துசினாலும் அவருக்கு அடுத்த நிலை தளபதி திபேரியுஸ் யூலியுஸ் அலெக்சாண்டரினாலும் வழிநடத்தப்பட்ட உரோமைப் பேரரசுப் படை எருசலேம் நகரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டது. அம்முற்றுகையானது முடிவில் நகரம் முழுவதும் கொள்ளையிடப்பட்டு, புகழ்பெற்ற இரண்டாம் எருசலேம் கோவில் அழிக்கப்பட்டதும் நிறைவுற்றது. மேலும்...


செந்நாய் என்பது நாய் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உள்ளினம் ஆகும். இதை ஆசிய காட்டு நாய், இந்திய காட்டு நாய், காட்டு நாய் எனப் பல பெயர்களிலும் அழைக்கிறார்கள். செந்நாய் கடைசி உறைபனி காலத்தில் தப்பிப்பிழைத்த விலங்காகும். செந்நாய் லூப்பசு என்ற மூதாதைய நாய் குடும்ப உறுப்பினரிடம் இருந்து சுமார் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு பிரிந்து படிவளர்ச்சி அடைந்ததாக இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி கொண்டு ஆராய்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 12 முதல் 20 கிலோ வரையிலான எடையில் இருக்கும் செந்நாய் 90 செ.மீ நீளமும் 50 செ மீ தோல் பட்டை உயரமும் உடையவையாகும். மேலும்..