பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான்
மாவட்டம்
பூஞ்ச்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த பூஞ்ச் மாவட்டப் பகுதிகளின் வரைபடம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த பூஞ்ச் மாவட்டப் பகுதிகளின் வரைபடம்
நாடுபாகிஸ்தான்
தலைமையிடம்ராவலாகோட்
பரப்பளவு
 • மொத்தம்855 km2 (330 sq mi)
மக்கள்தொகை (1998)
 • மொத்தம்4,59,000
 • அடர்த்தி548/km2 (1,420/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)

பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினை விளைவாக நடந்த முதலாம் இந்திய -பாகிஸ்தான் போரின் போது, காஷ்மீர் அரசிடமிருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த ஆசாத் காஷ்மீரின் 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ராவலாகோட் நகரம் ஆகும். இம்மாவட்டம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில மாவட்டமான பூஞ்ச் மாவட்டதின் ஒரு பகுதியாகும்.[1]

இதன் தலைமையிடமாக ராவலாகோட் உள்ளது. இம்மாவட்டத்தில் சுதன் மற்றும் அவான் இன பழங்குடி இசுலாமிய மக்கள் அதிகம் வாழ்கின்றனர். பூஞ்ச் மாவட்டம் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது.

பூஞ்ச் மாவட்டப் பிரிவினை[தொகு]

ஆங்கிலேயேர்களிடமிருந்து விடுதலையான இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் நடத்திய 1947 இந்திய பாகிஸ்தான் போரின் விளைவாக ஒன்றிணைந்த பூஞ்ச் மாவட்டம் இரண்டாக பிரிந்தது. பூஞ்ச் மாவட்டத்தின் மேற்கு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும், பூஞ்ச் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]