பலனக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலனக் கோட்டை
பகுதி: கண்டி மாவட்டம்
கன்னொருவை, இலங்கை
பலனக் கோட்டை is located in இலங்கை
பலனக் கோட்டை
பலனக் கோட்டை
ஆள்கூறுகள் 7°16′13″N 80°28′33″E / 7.270409°N 80.475876°E / 7.270409; 80.475876
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை எச்சம்
இட வரலாறு
கட்டியவர் கண்டி இராச்சியம்
சண்டைகள்/போர்கள் கன்னொருவ போர்

பலனக் கோட்டை [1](Balana fort) அலகலை மலைத்தொடருக்கு அருகில் கண்டி இராச்சியத்தினால் கட்டப்பட்டது. இக்கோட்டை தந்திரோபாய கல் அரணாகவும் கண்டி இராச்சியத்தின் புறக்காவலாகவும் செயற்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில், இம்மலையில் சுரங்கம் அமைத்து தேயிலை, கோப்பி ஆகியவற்றை இதனூடாக, கொழும்பு-கண்டி தொடருந்துப் பாதையில் கொண்டு செல்ல செயற்படுத்தினர்.[2]

போர்த்துக்கேயர் கண்டியை கைப்பற்ற முயன்றதால் கண்டியின் இரண்டாம் இராசசிங்கன் ஒல்லாந்தருடன் மறைமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டான். போர்த்துக்கேயர் கண்டி மீதான படையெடுப்புக்கள் சில பின்னடைவுகளின் பின் வெற்றி பெற்றது. இதனால் பலனக் கோட்டை போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது.[3]

உசாத்துணை[தொகு]

  1. "தமிழ் மின் நூலகம்". தமிழ் மின் நூலகம். பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Balana Fort". VOC Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.
  3. "Episodes of colonised history". Sunday Observer. 3 பெப்ரவரி 2008. Archived from the original on 2008-02-07. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலனக்_கோட்டை&oldid=3601383" இலிருந்து மீள்விக்கப்பட்டது