வலைவாசல்:மெய்யியல்/இந்தவாரத் தத்துவஞானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இது 16-ஆவது வாரம்.

இந்தவாரத் தத்துவஞானி[தொகு]

வாரம் 1           பார் - உரையாடுக - தொகு - வரலாறு


அரிசுட்டாட்டில் கி.மு. 384 - கி.மு. 322

அரிசுட்டாட்டில் ஒரு பண்டைக் கிரேக்க தத்துவஞானி. அவர் இயற்பியல், கவிதை, விலங்கியல், ஏரணம், சொல்லாடல், அரசியல், அரசாங்கம், நன்னெறி, உயிரியல் உள்ளிட்ட பல துறைகளில் தம் கருத்துகளைப் பதிவு செய்தார். அரிசுட்டாட்டில், அவரது ஆசான் பிளேட்டோ, அவரது ஆசான்  சாக்கிரட்டீசு ஆகிய மூவரையே பண்டை கிரேக்க மெய்யியலாளருள் மிகுந்த செல்வாக்குடையவராகக் கருதப்படுவர். அவர்களே சாக்கிரட்டீசிற்கு முந்தைய கிரேக்க மெய்யியலை இப்போதிருக்கும் மேற்கத்திய மெய்யியலின் அடிப்படையாக வார்த்தெடுத்தனர். பிளேட்டோ மற்றும் அரிசுட்டாட்டிலின் எழுத்துக்களே பண்டைய மேற்கத்திய மெய்யியலின் இரு முக்கியக் கூறுகளை நிறுவின.

அரிசுட்டாட்டில் ஒரு பல்துறை வல்லுநர். ஏறத்தாழ, அக்காலத்தில் அறியப்பட்ட அனைத்துத் துறையிலும் ஆய்வு செய்து அவற்றில் பல முக்கிய பங்களித்துள்ளார். அறிவியலில் உடற்கூற்றியல், வானியல், பொருளியல், கருவியல், புவியியல், நிலவியல், வானிலையியல், இயற்பியல், மற்றும் விலங்கியல் ஆகிய துறைகளில் ஆய்வு மேற்கொண்டார். மெய்யியலில் அழகியல், நன்னெறி, அரசாங்கம், மீவியற்பியல், அரசியல், உளவியல், சொல்லாட்சி மற்றும் இறையியல் ஆகிய துறைகளில் பங்களித்தார். மேலும் அவர் கல்வி, வெளிநாட்டுச் சுங்கம், இலக்கியம் மற்றும் கவிதை ஆகியவற்றையும் கையாண்டார். அவரது மொத்தப் பணிகளின் தொகுப்பு கிரேக்க அறிவின் கலைக்களஞ்சியமாகவே திகழ்கிறது...


வாரம் 2           பார் - உரையாடுக - தொகு - வரலாறு


பிளேட்டோ ஏறத்தாழ கி.மு. 427-347

பிளேட்டோ பெரும் செல்வாக்கு பெற்ற பண்டைய கிரேக்க மெய்யியலாளர் ஆவார்; சாக்கிரட்டீசின் சீடர்; பல மெய்யியல் உரையாடல்களின் ஆசிரியர், மற்றும் அரிசுட்டாட்டில் பயின்ற கல்விக்கூடத்தை ஏதென்சில் நிறுவியவர். பிளேட்டோ அக்கல்விக்கூடத்தில் பெருவாரியான உரைகளை நிகழ்த்தினார், பல மெய்யியல் துறைகளில், குறிப்பாக அரசியல், அறவியல், மீவியற்பியல், மற்றும் அறிவாய்வியல் போன்றவைக் குறித்து எழுதினார். பிளேட்டொவின் எழுதியவற்றுள் அவரது உரையாடல்களே மிக முக்கியமானவை. பிளேட்டோவின் அனைத்து உண்மையான மூல உரையாடல்களும் இன்றளவும் கிடைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

பிளேட்டோவின் உரையாடல்களில் பெரும்பாலும் சாக்கிரட்டீசு ஒரு பாத்திரமாக இடம்பெறும். சாக்கிரட்டீசு தாமாக எதனையும் எழுதாத காரணத்தால், அவற்றுள் எத்தனை சாக்கிரட்டீசுடையவை, எத்தனைப் பிளேட்டோவினுடையவை என்பதில் தீவிர கருத்து வேறுபாடு உண்டு. இதனையே "சாக்கிரட்டீசியச் சிக்கல்" என்பர். எனினும் சாக்கிரட்டீசின் போதனைகளின் தாக்கம் பிளேட்டோவிடம் சந்தேகத்திற்கிடமின்றி உள்ளது. அதனால் குறைந்தது பிளேட்டொவின் ஆரம்பக்காலப் படைப்புகளாவது கடன் வாங்கியவையும் தழுவல்களுமே...


வாரம் 3           பார் - உரையாடுக - தொகு - வரலாறு


சாக்கிரட்டீசு கி.மு. 470 - கி.மு. 399

சாக்கிரட்டீசு மேற்குலக மெய்யியலுக்கு வித்திட்ட ஓர் புகழ்பெற்ற பண்டையக் கிரேக்கத் தத்துவஞானி. அவர் ஏதென்ஸில் பிறந்து வாழ்ந்தார். அங்கேயே அவர் மெய்யியல் அறிவுத் தேடலில் தம் காலத்தைக் கழித்தார். அவர் வாதங்களைத் தன் சொந்த பிம்பத்தைக் கொண்டே உய்த்துணர்ந்தார். மேலும் நண்பர்கள், சீடர்கள் மற்றும் சமகால மெய்யியலாளர்கள் உடனான கடுமையான தொடர் உரையாடல்கள் வாயிலாகவும் வாதங்களை ஆக்கினார். பின்னாளில் கிரேக்கத்தின் மிகப் பெரும் ஞானியாக அறியப்பட்டார்

சாக்கிரட்டீசு குறித்த கருத்துகள் பெரிதும் பிளவுபட்டுள்ளன; அவரை வெகுவாகப் புகழும் வண்ணம் சிலவும், வெகுவாகத் தூற்றும் வண்ணம் சிலதுமாக அமைந்துள்ளன. அவருக்கு பிளேட்டோ போன்ற மனமார்ந்த சீடர்களாகப் பலரும் கடுமையாகத் தூற்றுவோராகப் பலரும் இருந்தனர். வயது முதிர்ந்த காலத்தில் ஏதெனிய அரசாங்கத்தின் அவப்பெயரைச் சம்பாதித்தனால், அவரது பொதுவிட தர்க்கங்களுக்கும் இளம் செல்வந்தர்களுடனான அவரது உறவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. எனினும் அவர் வழக்கம் போலவே தம் பணிகளை மேற்கொண்டார். இறுதியாக, அவர் புதுப்புது கடவுட்களை உருவாக்கியும் (திரிபுக் கொள்கை), கடவுள் நம்பிக்கையை மறுத்தும் (இறைமறுப்பு) இளைஞர்களை கெடுப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். பழங்குறிப்புகளின்படி அவர் விடமருந்திச் சாகும்படி தீர்ப்பளிக்கப்பட்டது, இன்றேல் ஏதென்சைவிட்டு வெளியேற வாய்ப்பளிக்கப்பட்டது...