ராமய்யன் தளவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமய்யன் என்பவர் அன்றைய திருவிதாங்கூர் அல்லது வேணாட்டில் 1737 முதல் 1756 வரை தளவாயாக அல்லது முதன்மை அமைச்சராக பணியாற்றியவர். 1741-ல் குளச்சல் போரில் முக்கிய பங்காற்றியவர்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ராமய்யன் தளவாய்

ராமய்யன் தற்போதைய தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏர்வாடியில் பிறந்தார். குடும்ப ஏழ்மை நிலை காரணமாக தனது ஆறாவது வயதில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் திருவட்டார் என்னும் இடத்திற்கு சென்று குடியேறினார்.

தளவாயாக[தொகு]

கி்.பி. 1736-ல் தளவாய் ஆறுமுகம்பிள்ளை மறைவுக்கு பின் தளவாயாக மன்னர் மார்த்தாண்டவர்மாவால் நியமிக்கப்பட்டார். மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் காயன்குளம், கொல்லம், ஆலப்புழா மற்றும் பல இடங்களில் நடந்த போர்களில் திருவிதாங்கூர் படை வெற்றிபெற முக்கிய பங்காற்றினார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வி. நாகம் அய்யா - திருவிதாங்கூர் நாட்டு கையோடு பக்கம் 342-343
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமய்யன்_தளவாய்&oldid=2759154" இலிருந்து மீள்விக்கப்பட்டது