மொரப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொரப்பூர் (Morappur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையகமான வட்டார வளர்ச்சி அலுவலகம் மொரப்பூரில் இயங்குகிறது. இந்த ஊர் மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது தருமபுரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில், தர்மபுரிலிருந்து சுமார் 23 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பள்ளிகள்[தொகு]

அங்கன் வாடி மையங்கள் தோராயமாக 5 உள்ளன. தொடக்கப்பள்ளிகள் 4 உள்ளன. உயர்நிலைப்பள்ளிகள் இரண்டு உள்ளன. மேலும் தனியார் பள்ளிகள் 3 உள்ளன. தனியார்கல்லூரிகள் 2 உள்ளன.

மருத்துவமணை[தொகு]

ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது சுற்றுப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பயன் அடைகினறனர்.

கோவில்கள்[தொகு]

மொரப்பூரில் கோவில்கள் சிங்கார வேலன் சுவாமி திருக்கோயில் சென்னகேசவ பெருமாள் கோயில் பேட்டை மரியம்மன் திருகோயில் தீப்பஞ்சி அம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்த கோயில்கள் ஆகும்.

தொடருந்து நிலையம்[தொகு]

சென்னை - கேரளா வரை செல்லும் தொடருந்துகள் மொரப்பூர் தொடருந்து நிலையம்[2] வழியாக செல்லுகிறது. மொரப்பூர் இரயில் நிலையம் 1866-இல் ஆங்கிலோயர் ஆட்சியில் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. மொரப்பூர் தொடருந்து நிலையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரப்பூர்&oldid=3599282" இலிருந்து மீள்விக்கப்பட்டது