மகிசாசுரமர்த்தனி சிற்பம் (கமால் வீதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகிசாசுரமர்த்தனி சிற்பம் (கமால் வீதி), யாழ்ப்பாணம் முசுலிம் வட்டாரத்தில் உள்ள கமால் வீதியை அண்டியுள்ள நிலமொன்றில் வீடொன்றைக் கட்ட அத்திவாரம் வெட்டியபோது கண்டெடுக்கப்பட்ட சிற்பம் ஆகும். செப்பினால் செய்யப்பட்ட இச்சிலை 14-16ம் நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்த சிற்பமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏதோவொரு கோயிலில் இருந்த இச்சிலையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாப்பதற்காக இவ்விடத்தில் புதைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது இப்போது யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் உள்ளது.

1979ம் ஆண்டில் இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டபோது இதுபற்றிக் கட்டுரை எழுதிய பேராசிரியர் இந்திரபாலா, இது மகிசாசுரமர்த்தனியாக இருக்காது என்றும் நந்தா எனப்படும் தெய்வமாக இருக்கலாம் என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். எனினும் இதுபற்றி மேலும் ஆராயவேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.[1]

அமைப்பு[தொகு]

மேற்புறம் அகன்று கீழ்ப்புறம் ஒடுங்கிய முட்டைவடிவ அமைப்பிலான திருவாசியையும் சதுரவடிவப் பீடத்தில் அமைந்த வட்டமான தாமரையின்மேல் பெண் தெய்வச் சிலை நிற்கும் நிலையில் காணப்படுகிறது. பீடத்தின் முன்பகுதியில் புடைப்புச் சிற்பமாக எருமை வடிவம் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்திரபாலா, கா., யாழ் கமால் வீதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சைவச் சிலைகள்: அம்மனின் செப்புத் திருமேனி, வீரகேசரி வாரவெளியீடு, 25-2-1979

உசாத்துணைகள்[தொகு]

  • கிருஷ்ணராஜா, செல்லையா., சிற்பக்கலைமரபுகள் மற்றும் குளங்களின் பெயர்களினூடாக அறியப்படும் நல்லூரின் பண்பாடு, சிங்கை ஆரம் பிரதேச மலர், நல்லூர்ப் பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை, நல்லூர், 2015.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]