சண்டேசுவரர் சிற்பம் (கமால் வீதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சண்டேசுவரர் சிற்பம் (கமால் வீதி), யாழ்ப்பாணம் முசுலிம் வட்டாரத்தில் உள்ள கமால் வீதியை அண்டியுள்ள நிலமொன்றில் வீடொன்றைக் கட்ட அத்திவாரம் வெட்டியபோது கண்டெடுக்கப்பட்ட சிற்பம் ஆகும். இது 10-12ம் நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்த சோழர் கலைப்பாணியில் அமைந்த சிற்பமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏதோவொரு கோயிலில் இருந்த இச்சிலையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாப்பதற்காக இவ்விடத்தில் புதைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது இப்போது யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • கிருஷ்ணராஜா, செல்லையா., சிற்பக்கலைமரபுகள் மற்றும் குளங்களின் பெயர்களினூடாக அறியப்படும் நல்லூரின் பண்பாடு, சிங்கை ஆரம் பிரதேச மலர், நல்லூர்ப் பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை, நல்லூர், 2015.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]