வ உ சிதம்பரனார் பூங்கா மைதானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வ. உ. சிதம்பரனார் பூங்கா விளையாட்டரங்கம், ஒரு கால்பந்தாட்டத் திடலாகும். தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டில் அமைந்துள்ள வ உ சி பூங்கா வளாகத்தில் இது அமைந்துள்ளது. வ உ சிதம்பரம்பிள்ளையின் நினைவாக இப்பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் விளையாட்டு வளர்ச்சித்துறையால் நிர்வாகிக்கப்படும் இவ்வளாகம், ஈரோடு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1] இந்த வளாகத்தில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.[2]

நாடுதழுவிய குத்துச்சண்டை போட்டிகள்[தொகு]

மே 2010-இல், நாடுதழுவிய இளையோர், மிக இளையோருக்கான குத்துச்சண்டை போட்டிகள் இவ்வளாகத்தில் நடைபெற்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Five-day recruitment rally from October 19". Archived from the original on 2008-03-20. பார்க்கப்பட்ட நாள் 2015-09-19.
  2. Sports Development Authority Of Tamilnadu