தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், (பபாசி) - (The Bookseller`s and Publishers` Association of South India (BAPASI),[1] சென்னையில் 24 ஆகஸ்டு 1976 அன்று, பி. ஐ பதிப்பகத்தின் உரிமையாளர் மாத்யூ என்பவரால், சில பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பு 489 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சங்கத்தின் நோக்கம்[தொகு]

புத்தக ஆர்வலர்களின் வாசிப்பைப் பரவலாக்குவதற்காகவும் அதிகமான நூல்களை வெளியிடுவதற்காகவும், தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடத்துகிறது.[2][3] இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்கிறது. இச்சங்கம் இதுவரை சென்னையில் 36 ஆண்டுகளும், மதுரையில் 10 ஆண்டுகளும், கோவையில் 5 ஆண்டுகளும் புத்தகக் காட்சியை ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடத்தியுள்ளது.

புத்தகத் திருவிழாவில் விற்பனை செய்யப்படும் நூல்களுக்கு, விற்பனை விலையில் குறைந்த பட்சம் பத்து விழுக்காடு தள்ளுபடி வழங்குகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.justdial.com/Chennai/The-Booksellers-Publishers-Association-Of-South-India-%3Cnear%3E-Behind-Kamarajar-Arangam-Teynampet-West/044P7036443_BZDET
  2. மதுரையில் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்:250 அரங்கங்கள்; 7 செப்டம்பர் வரை நடக்கிறது
  3. மதுரையில் புத்தகத் திருவிழா தொடக்கம்

வெளி இணைப்புகள்[தொகு]