இலட்சுமன் வாமன் பரஞ்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலட்சுமன் வாமன் பரஞ்பே (Laxman Vaman Paranjpe (L. V. Paranjpe), ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இந்து சமய சித்தாங்கள் வகுக்கும் இந்து தேசியம் அமைப்பை கேசவ பலிராம் ஹெட்கேவருடன் இணைந்து நிறுவியவர். 1920ஆம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநாடு நாக்பூரில் நடந்து கொண்டிருந்த போது, பாரத சுயம்சேவாக் மண்டல் என்ற தொண்டரணி அமைப்பு, பரஞ்பே மற்றும் ஹெட்கேவரால் இணைந்து துவக்கப்பட்டது. இவ்வமைப்பின் தொண்டர்கள் பயிற்சியின் போதும், சமுகப் பணியின் போதும் சீருடையில் இருந்தனர். இவ்வமைப்பே பின்னர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் முன்னோடியாக விளங்கியது.

ஹெட்கேவர், இந்திய விடுதலை போராட்டத்தின் போது சிறையில் இருந்த காலத்தில், பிரபஞ்பே 1930 - 1931 ஆம் ஆண்டில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமன்_வாமன்_பரஞ்பே&oldid=3796987" இலிருந்து மீள்விக்கப்பட்டது