எழுத்தியல் (நன்னூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் முதலாவது பகுதி எழுத்தியல் ஆகும். இதில் கடவுள் வணக்கம் எனத் தொடங்கி, எழுத்திலக்கணத்தின் 12 கூறுகள் எழுதப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றையும் விளக்கும் நூற்பாக்கள் (58-126), புறனடை நூற்பா (127) என மொத்தம் 72 நூற்பாக்கள் உள்ளன.

கடவுள் வணக்கம்[தொகு]

பூக்கள் நிறைந்த அசோக மரத்தினது அலங்கரிக்கப்பட்ட நிழலில் அமர்ந்திருக்கும் பிரம்ம தேவனை வணங்கி நான் இந்நூலில் எழுத்திலக்கணத்தை நன்றாகக் கூறுவேன் என்று கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நன்னூலில் எழுத்திலக்கணம் தொடங்குகிறது.[1]:

எழுத்திலக்கணத்தின் கூறுகள்[தொகு]

எழுத்திலக்கணத்தின் கூறுகளாக எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகள்[2]:

என்பனவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
    நான்முகன் தொழுதுநன் கியம்புவ எழுத்தே- |நன்னூல்- 56
  2. <poem>எண்பெயர் முறைபிறப்பு உருவம் மாத்திரை முதல் ஈறு இடைநிலை போலி என்றா பதம்புணர்பு எனப்பன் னிருபாற்று அதுவே. - நன்னூல்-57)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்தியல்_(நன்னூல்)&oldid=3193647" இலிருந்து மீள்விக்கப்பட்டது