சிறப்புப்பாயிரம் பிறர்செய்யக் காரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புப் பாயிரம் பிறர் செய்யக் காரணம் யாவை என்று நன்னூல் சில குறிப்புகளைத் தருகிறது.

காரணம்[தொகு]

ஒரு நூலின் சிறப்புப் பாயிரத்தை அந்நூலாசிரியரல்லாத வேறொருவர் செய்யவேண்டியதன் காரணமாக நன்னூல் தரும் விளக்கம்:

”இதுவரை வெளிப்படாமல் இருந்த சிறந்த நுட்பங்கள் எல்லாம் விளங்குமாறு, பல்துறை அறிவோடு சிந்தித்து, விரிவாக ஒரு நூலை எழுதினாலும் அதை எழுதியவன் தன்னைப்பற்றித் தானே புகழ்ந்து கொள்ளுதல் கூடாது. எனவே சிறப்புப்பாயிரம் பிறரால் செய்யப்படல் வேண்டும்”. [1]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
    தான்றற் புகழ்தல் தகுதி யன்றே. - நன்னூல் 52

வெளி இணைப்புகள்[தொகு]