இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயேசுவின் காலத்தில் எருசலேம் தேவாலயத்தை வணிகத்தலம் போல மாறியிருந்ததைக் கண்டு அங்கிருந்தவர்களைச் சாட்டையால் அடித்து துரத்திய நிகழ்வை கூறுவது இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தல் நிகழ்வாகும். இந்நிகழ்வு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் மத்தேயு 21:12-17, மாற்கு 11:15-19, லூக்கா 19:45-48, யோவான் 2:13-22 ஆகிய நற்செய்தி வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிலைத் தூய்மைப்படுத்தல்[தொகு]

இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தல்(ஓவியம்)

இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தல் நிகழ்வை பற்றி நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளவை

யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள். "உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்" என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். --- யோவான் 2:13-17

ஆதாரங்கள்[தொகு]

திருவிவிலியம் மத்தேயு 21:12-17, மாற்கு 11:15-19, லூக்கா 19:45-48, யோவான் 2:13-22