எமதூதர்கள்
எமதூதர்கள் (Yamaduta) இந்து தொன்மவியலின்படி, எமதர்மராசாவின் தூதுவர்கள். எமனின் கட்டளைப்படி வாழுங்காலம் முடிந்த உயிர்களைக் கவர்ந்து, எமனின் முன் நிறுத்தி, பின் அவ்வுயிர்கள் செய்த பாவபுண்ணியத்திற்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகத்திற்கோ அழைத்துச் செல்பவர்கள். இவர்களை எமகிங்கரர்கள் என்றும் அழைப்பர். [1] [2]