சென்னகேசவப் பெருமாள் கோயில்

ஆள்கூறுகள்: 13°05′18.2″N 80°16′50.0″E / 13.088389°N 80.280556°E / 13.088389; 80.280556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னகேசவப் பெருமாள் கோயில்
சென்னகேசவப் பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
சென்னகேசவப் பெருமாள் கோயில்
சென்னகேசவப் பெருமாள் கோயில்
தமிழ்நாட்டில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:13°05′18.2″N 80°16′50.0″E / 13.088389°N 80.280556°E / 13.088389; 80.280556
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:சென்னை
ஏற்றம்:33 m (108 அடி)
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்துக் கோயில் கட்டிடக்கலை

சென்னகேசவப் பெருமாள் கோயில் (Chennakesava Perumal Temple) சென்னை நகரம் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கட்டபட்டது.[1]. சென்னகேசவப் பெருமாள் கோயில், தேவராஜ முதலியார் தெரு, சௌகார்பேட்டை, சென்னையில் அமைந்துள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வழங்கிய நிதி உதவியுடன் கட்டப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று. முன்னர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இரண்டு கோயில்கள் இருந்தன. அவற்றை ஆங்கிலேயர்கள் அப்புறப்படுத்தி சர்ச் கட்ட முயன்றபோது துவிபாஷியான மணலி ராமகிருஷ்ண முதலியார் அந்த கோவில்களை அழிக்க விடாமல் இந்த இடத்தில் பாரிமுனை பூக்கடை அருகே மீண்டும் நிர்மாணித்தார். ஸ்ரீசென்ன கேசவப்பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ சென்னமல்லீசுவரர் கோவில் இரண்டு கோவில்கள் இங்கே அமைந்து சென்னை என்ற பெயர் வரக் காரணமானது.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 13°05'18.2"N, 80°16'50.0"E (அதாவது, 13.088381°N, 80.280546°E) ஆகும்.

வரலாறு[தொகு]

இக்கோயிலின் மூலவரான சென்னகேசவப் பெருமாளின் பெயரில், இந்நகரத்திற்கு சென்னப் பட்டிணம் என்று பெயர் வந்தது.[2][3]

சென்னகேசவப் பெருமாள் கோயில் முதலில் 1646ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[4]

தற்போதைய மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் இருந்த சென்னகேசவப் பெருமாள் கோயில் மற்றும் சென்னமல்லீசுவரர் கோயில் , பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தங்களது வணிக வசதிக்காக 1757ஆம் ஆண்டில் இடித்த போது, பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். பின்னர் கம்பேனி நிறுவனத்தார், மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு இடமும் பொருளும் கொடுத்து, 1762ஆம் ஆண்டில் தற்போது உள்ள இடத்தில் சென்னகேசவப் பெருமாள் கோயிலும்.[5] சென்னமல்லீசுவரர் கோயிலும் அடுத்தடுத்து மீண்டும் கட்டப்பட்டன. இந்த இரண்டு கோயில்களையும் இணைத்து பட்டணம் கோவில் என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறனர்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Srinivasachari, Introduction, p xxix
  2. "Face behind the name". The Hindu (Chennai, India). 28 February 2002 இம் மூலத்தில் இருந்து 11 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130111064537/http://www.hindu.com/thehindu/mp/2002/02/28/stories/2002022800030400.htm. 
  3. "Chennai High: Where history beckons". The Times of India (சென்னை: The Times Group). 27 ஆகஸ்டு 2010 இம் மூலத்தில் இருந்து 2013-02-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216064735/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-27/chennai/28292743_1_pillars-fort-st-george-madras/2. பார்த்த நாள்: 20 Jan 2013. 
  4. Muthiah, S. (4 March 2012). "The 'Town Temple' resurrected". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/arts/history-and-culture/article2960548.ece. 
  5. "Welcome to Sri Chenna Kesavapperumal Devasthaanam". Archived from the original on 20 December 2018.

மேற்கோள்கள்[தொகு]

  • Srinivasachari, C. S. (1939). History of the city of Madras written for the Tercentenary Celebration Committee. Madras: P. Varadachary & Co..