அழுக்கு சாமியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழுக்கு சாமியார் என்பவர் தமிழ்நாட்டின் பொள்ளாச்சி பகுதிக்கு அருகே இருக்கும் வேட்டைக்காரன்புதூரில் வாழ்ந்த ஒரு சித்தராவார்.[1] இவருடைய ஜீவ சமாதியை இப்போது கோவிலாக்கி வழிபடுகின்றனர். இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. இவருடைய பிறப்பு, இயற்பெயர், ஊர் ஆகியவைப் பற்றி பக்தர்களுக்குத் தெரியவில்லை.

பெயர்க் காரணம்[தொகு]

இவர் எப்போது குளிக்கிறார் என்பதை அறியாத மக்கள், இவரை அழுக்குச் சாமியார் என்று அழைக்க அதுவே இவருடைய பெயராக நிலைத்துவிட்டது.

ஜீவ சமாதி[தொகு]

இவர் 1918ம் ஆண்டு கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் வேட்டைக்காரன் புதூரிலேயே ஓரிடத்தினைத் தேர்ந்தெடுத்து ஜீவ சமாதியானார். அவருடைய ஜீவ சமாதி தற்போது அழுக்கு சாமியார் கோவில் அமைந்துள்ளது.

குரு பூசை[தொகு]

அழுக்கு சாமியார் ஜீவ சாமியான கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திர தினத்தன்று அவருக்கு குரு பூசை கொண்டாடப் படுகிறது. இக்குரு பூசையில் பாண்டிச்சேரியின் முதல்வர் ந. ரங்கசாமி கலந்து கொண்டுள்ளார்.[2] இந்நாளில் அழுக்கு சாமியாருக்குப் பிடித்த கம்பஞ் கஞ்சியை பக்தர்களுக்குத் தருகிறார்கள்.[3]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. பரிகாரத் தலங்களும் அவற்றின் சூட்சுமங்களும் - ஏ. எம். ராஜகோபாலன் குமுதம் 16-03-2015 பக்கம் 84
  2. "பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் அழுக்கு சாமியார் கோவிலில் ந. ரங்கசாமி சாமி தரிசனம் மாலைமலர் புதன்கிழமை, நவம்பர் 20". Archived from the original on 2013-11-25. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
  3. பரிகாரத் தலங்களும் அவற்றின் சூட்சுமங்களும் - ஏ. எம். ராஜகோபாலன் குமுதம் 16-03-2015 பக்கம் 87

http://www.dinamalar.com/news_detail.asp?id=132705

வெளி இணைப்புகள்[தொகு]

http://tamil.oneindia.com/news/2008/02/18/tn-puducherry-cm-rangasamis-secret-visit.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுக்கு_சாமியார்&oldid=3542037" இலிருந்து மீள்விக்கப்பட்டது