நாகூர் நாகநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் நாகூர் நாகநாதர் கோயில் எனப்படும் கோயில் உள்ளது. ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள் பெற்ற திருத்தலம் நாகூர்.

இறைவன்[தொகு]

இத்தலத்தில் உறையும் இறைவன் நாகநாதர் என அழைக்கப்படுகின்றார்.

இறைவி[தொகு]

இத்தலத்து இறைவி நாகவள்ளி எனப்படுகிறார்.

சிவராத்திரி தொடர்பு[தொகு]

நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. டி.கோவிந்தராஜு, கண்டியூர் வந்த காளத்திநாதன், தினமணி, வெள்ளிமணி, 13.2.2015

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகூர்_நாகநாதர்_கோயில்&oldid=2254477" இலிருந்து மீள்விக்கப்பட்டது