சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம்

சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம் (ஆங்கிலம்: Sungai Palas Tea Plantation, மலாய் மொழி: Ladang Teh Sungai Palas) என்பது மலேசியா, பகாங், கேமரன் மலை, பிரிஞ்சாங்கில் அமைந்துள்ள ஒரு தேயிலைத் தோட்டம் ஆகும். இதனை போ தேயிலை தோட்டம் என்று பரவலாக அழைப்பதும் உண்டு. 1929-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இத்தேயிலைத் தோட்டம் மலேசியாவில் தேயிலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன்மை இடம் வகிக்கிறது.[1]

போ (BOH) தேயிலை நிறுவனத்திற்கு 8000 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.[2] சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டத்தில், 4 மில்லியன் கிலோ தேயிலை உறபத்தி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு கேமரன் மலையில் போ தேயிலை தோட்டம்; சுங்கை பாலாஸ் தேயிலை தோட்டம்; பேர்லி தேயிலை தோட்டம்; என மூன்று தேயிலைத் தோட்டங்களும், சிலாங்கூர் மாநிலத்தில் புக்கிட் சீடிங் எனும் இடத்தில் ஒரு தேயிலைத் தோட்டமும் உள்ளன.[3]

ஜான் அர்சிபால்ட் ரஸ்ஸல்[தொகு]

பாரத் தேயிலை தோட்டத்தைக் காட்டிலும், சுங்கை பாலாஸ் தோட்டத்திற்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை தருகின்றனர். அதற்கு காரணமும் உண்டு. மலேசியாவில் அதிகமானோர் போ தேயிலையையே அதிகமாக விரும்பி நுகர்கின்றனர்.[4]

சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம், பிரிஞ்சாங் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் கீ பண்ணைச் சந்தையில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இந்தத் தோட்டம் 1929-இல் ஜான் அர்சிபால்ட் ரஸ்ஸல் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. 1890-இல் இவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது, தன் தந்தையாருடன் இங்கிலாந்தில் இருந்து மலாயாவுக்கு வந்தார்.[5]

மலேசியாவின் முதல் தேயிலை தோட்டம்[தொகு]

1913-இல் சிலாங்கூர், பத்து ஆராங்கில் ஒரு நிலக்கரிச் சுரங்கத்தைத் திறந்தார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சுரங்கத் தொழிலில் ஏற்பட்ட சில சறுக்கல்களினால் தேயிலை உற்பத்தி துறையில் அவருடைய கவனம் திசை மாறியது. அதுதான் அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய திருப்பு முனையாகும்.[6] 1932-இல் தன்னுடைய 50-ஆவது வயதில் காலமானார். அதன் பின்னர் அவருடைய மகன் திரிஸ்தான் பியூசாம்ப் ரஸ்ஸல் (82) என்பவர் போ நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்சமயம் திரிஸ்தானின் மகள் காரலின் போ நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி வகிக்கிறார்.[7]

மலேசியாவில் முதன்முதலாகத் திறக்கப்பட்ட தேயிலை தோட்டம், இந்த சுங்கை பாலாஸ் தேயிலைத் தோட்டம். மலேசியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில் போ தேயிலை நிறுவனம் 70 விழுக்காடு தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது.[8]

மேற்கோள்[தொகு]

  1. The Boh Tea Plantations were started by John Archibald Russell, the son of a government official, in 1929.
  2. Boh Tea Plantation has a total of 8000 acres planted with tea.
  3. Boh owns four tea gardens in the country, namely Boh, Sg Palas and Fairlie in Cameron Highlands, and Bukit Cheeding in Selangor.
  4. Sungai Palas Tea Plantation is definitely more popular among tourists as compared to Bharat's Cameron Valley Tea Plantation.
  5. John Archibald Russell, who came from England to Malaya in the 1890.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Thus, BOH Plantations, the current market leader for tea, was born". Archived from the original on 2016-03-21. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.
  7. Of his two children, Caroline, as the CEO of the company and a Malaysian citizen, is actively involved while John, who was instrumental in setting up the company’s tea plantation in Australia, is now a software designer living in the United States.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "The plantation was opened in 1929 by J. A. Russell, a British concern. It was the first tea plantation opened in Malaysia, hence it comes to no surprise of its popularity". Archived from the original on 2015-04-12. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.