இ. தெய்வானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இ. தெய்வானை (பிறப்பு: ஆகத்து 15 1950) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓர் ஆசிரியையும் கூட. மலேசிய இந்து சங்கம் மூவார் வட்டாரத்தின் மாதர் பகுதித் தலைவியுமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1965 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • தமிழ் நேசன் பவுன் பரிசு (1973)
  • முருகு சுப்ரமணியன் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1988)
  • பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விருது (1998)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._தெய்வானை&oldid=3233373" இலிருந்து மீள்விக்கப்பட்டது