தேவேந்திரன் (இசையமைப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவேந்திரன்
இயற்பெயர்தேவேந்திரன்
பிறப்பிடம்திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை, தோல் இசைக்கருவிகள்
இசைத்துறையில்1987–நடப்பு

தேவேந்திரன் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். 1987ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த வேதம் புதிது திரைப்படத்தின் கண்ணுக்குள் நூறு நிலவா எனும் பாட்டின் மூலம் புகழடைந்தவர்.

இளமை[தொகு]

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே வடகரையில் பிறந்த தேவேந்திரன், கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையை சிவகிரி, சீமதுறை மற்றும் மதுசூதனனிடமும், மேற்கத்திய இசையை தாம்சன் என்பவரிடமும் பயின்றார்[1].

இசையமைத்த திரைப்படங்கள்[தொகு]

Year Movie title Notes
1987 மண்ணுக்குள் வைரம்
1987 வேதம் புதிது
1987 ஆண்களை நம்பாதே
1988 காலையும் நீயே மாலையும் நீயே
1988 உழைத்து வாழ வேண்டும்
1988 கனம் கோர்ட்டார் அவர்களே
1994 முதல் பயணம்
2009 மூணார்
2010 பாலு தம்பி மனசிலே
2012 நானும் என் ஜமுனாவும்

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]